எஸ்.எஸ்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை முகில் முத்தமிழ் மன்றம் சார்பாக, கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்த நாள் விழா, 2026 ஜூலை 15, புதன்கிழமை அன்று கருத்தரங்க அரங்கில் சிறப்பாக நடைபெறுகிறது.
இந்நிகழ்வை முன்னிட்டு, மாணவர்களின் பேச்சுத்திறன் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையில் பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டி பிற்பகல் 2.30 மணி அளவில் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்விற்கு தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. கருப்பையா அவர்கள் ஒருங்கிணைப்பாளராகவும், கல்லூரி முதல்வர் முனைவர் வி. மகாலட்சுமி அவர்கள் தலைமையிலும் விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

